இறைவர் திருப்பெயர் : கம்பஹரேஸ்வரர். இறைவியார் திருப்பெயர் : தர்மசம்வர்த்தினி. தல மரம் : தீர்த்தம் : வழிபட்டோர் : வாணாசுரன், வரகுண பாண்டியன். வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - புன்கூரார் புறம்பயத்தார் (6-51-11).
தல வரலாறு
- இரணியனை அழித்த நரசிம்மத்தினை இறைவன் சரபமூர்த்தியாக வந்து அடக்கிய தலம்.
- வரகுண பாண்டியன் தனக்கு நேர்ந்த பிரமகத்தி பழி நீங்கிச் செல்லுங்கால், அப்பழி பின்னும் தொடருமோ என, அவனுக்கு உண்டாகிய நடுக்கத்தைத் தீர்த்து வைத்தமையால் சுவாமிக்கு கம்ப ஹரேஸ்வரர் என்று பெயர். (கம்பம் - நடுக்கம்)
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- வாணாசுரன் பூசித்தது.
- பெரிய கோயில்; கற்றளி.
- பிராகாரத்தில் சரபமூர்த்தி உட்பட சிற்ப வேலைப்பாடுடைய கற்கட்டிடம் உள்ளது.
- இத்தலத்தில் சரபேஸ்வர் சிறப்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கின்றார்.
- சண்டேசுவரர் சந்நிதியின்மேல் முகப்பில் உமை அருகிலிருக்க, சிவபெருமான் சண்டேசுவரருக்குக் கொன்றை மாலையைத் தலையிற் சூட்டிச் "சண்டீசப்பதம்" நல்கும் காட்சி சுதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பங்குனியில் பெருவிழா மற்றும் பிற வழிபாடுகளும் நடைபெறுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடுகும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில், (கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ.ல்) சாலையோரத்தில் உள்ள தலம்.
No comments:
Post a Comment