இறைவர் திருப்பெயர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர். இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை. தல மரம் : தீர்த்தம் : வழிபட்டோர் : சரசுவதி, காமதேனு, கௌதமமுனிவர் ஆகியோர். தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - மையாடிய கண்டன்மலை. 2. அப்பர் - 1. காலனை வீழச் செற்ற, 2. பாரிடஞ் சாடிய, 3. கொல்லி யான்குளிர், 4. வகையெலா முடையா 5. மெய்த்தானத் தகம்படியுள்.
தல வரலாறு
- மக்கள் வழக்கில் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.
- சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.
சிறப்புக்கள்
- இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.
- அம்பிகையின் திருப்பெயர் தேவாரப் பதிகத்துள் இளமங்கையம்மை என்றும் குறிக்கப்படுகிறது.
- கல்வெட்டுக்களில் இத்தலம் "இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.
- இக்கல்வெட்டுக்களிலிருந்து, நிபந்தமாக நிலங்கள் அளித்தமை, விளக்கெரிக்கப் பொற்காசுகள் தந்தமை, ஊர்ச்சபையதார் ஸ்தபன மண்டபம் கட்டியது, கோயிற் பணியாளர்களுக்கு நிலங்கள் அளித்தமை, சுவாமியின் நைவேத்தியத்திற்கு நிலங்கள் விட்டது முதலியன தெரியவருகிறது.
- இலங்கையரசன் கயவாகு என்பவன் இப்பெருமானைத் தன் குலதெய்வமாகக் கொண்டு திருவிழாக்கள் செய்வித்த செய்தியும் கல்வெட்டால் தெரியவருகிறது.
- இக்கோயிலில் பல்லவர்களும் திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சான்றாக சிம்மத் தூண்கள் உள்ளதைக் காணலாம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடுதிருவையாற்றுக்கு மிக அருகாமையில் உள்ளது.
No comments:
Post a Comment