இறைவர் திருப்பெயர் : நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர். இறைவியார் திருப்பெயர் : கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை. தல விநாயகர் : சண்பக விநாயகர். தல மரம் : சண்பகம். தீர்த்தம் : சூரிய தீர்த்தம். வழிபட்டோர் : ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர். தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. பொன்னேர் தருமே னியனே, 2. தழைகொள்சந்தும் மகிலும். 2. அப்பர் - 1. கச்சைசேர் அரவர் போலுங், 2. நல்லர் நல்லதோர், 3. தாயவனை வானோர்க்கும். 3. சுந்தரர் - 1. பிறையணி வாணு தலாள்.
தல வரலாறு :
- இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.
- நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர் பெற்றது.
- சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.
- ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.
சிறப்புக்கள் :
- சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.
- இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது.
- தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார்.
- இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள்.
- காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.
- சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன.
- கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
- இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.
அமைவிடம்
இந்தியா - மாநிலம் : தமிழ் நாடுகும்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
No comments:
Post a Comment