Friday 5 April 2013

ஓம் சிவ சிவ ஓம்

சிவ சிவ என்கிலார் தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினைமாளும் சிவ சிவ என்றிட தேவருமாவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே.
இது திருமூலர் சித்த தெய்வத்தின் திருமந்திரம்.  இதை அனைவரும் அறிவர்.  இதில் சிவ சிவ என்பது சிவநெறி செல்வர்களால் பெருமையாக அழைக்கப்படும் காரணப் பஞ்சாட்ரம் ஆகும்.
நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம் (உடல் திருவைந்தெழுத்து)
சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம் (உயிர் திருவைந்தெழுத்து)
சிவய சிவ சிவ - அதிசூட்சும பஞ்சாட்சரம் (கடி உயிர் திருவைந்தெழுத்து)
சிவ சிவ - காரண பஞ்சாட்சரம் (தோற்ற திருவைந்தெழுத்து)
மேற்கண்ட திருமந்திரத்தின் பொருள்:- (எம் சிற்றறிவுக்கு எட்டியவரையில் விளக்கியிருக்கிறேன்.  விளக்கம் சரியாக இருப்பின் அது சிவனின் கருணை.  பிழை இருப்பின் அது சிவனின் திருவிளையாடல்.  எதுவும் என்னால் நடந்ததல்ல.  எல்லாம் அவன் செயல்)
தீவினையாளர் (பாவம் செய்தவர்கள்) சிவ சிவ என்று செபிக்க மாட்டார்கள், செபிக்கமுடியாது.  அவரவர் செய்த தீவனைகள் செபிக்கவிடாமல் தடுக்கும்.  அவ்வாறு செபித்து வந்தால் தீவினைகள் யாவும் (மூட்டை மூட்டையாக இருந்தாலும்) அழிந்து போகும்.  தீவினைகள் அகன்றால் பிறவி நிலையில் மேன்மை பெற்று மனிதப்பிறவியிலிருந்து தேவராக (சிவகணமாக) மாறமுடியும்.  அவ்வாறு மேன்மை பெற்று சிவகணமாகி முக்தி பெற்று சிவகதியை (சிவனுள் ஒடுங்குதல் - பிறவியிலா பெருநிலை) அடையமுடியும்.
இது சிவ சிவ என்ற மந்திரத்தின் விளக்கம் மட்டுமே.  ஒவ்வொரு சித்தர்களுக்கும் மூலமந்திரங்கள் இருப்பதை எங்கள் ஊரின் நூலகத்திலுள்ள சித்தர்கள் நூல்களிலிருந்து அறிந்தேன்.  அவையாவன:-
1. நந்தீசர் ------  சும்
2. போகர் ------  சம்
3. அகத்தியர் ------ ஞாம்
4. கொங்கணர் ------- ணம்
5. சட்டைமுனி ------- டம்
6. சுந்தரானந்தர் ------ நம்
7. ராமதேவர் ------- தம்
8. கருவூரார் ------ பம்
9. பிரம்மமுனி ------ மம்
10. ரோமர் ------ ரம்
11. மச்சமுனி ------ யம்
12. புண்ணாக்கீசர் ------ வம்

13. இடைக்காடர் ------- லம்
14. கோரக்கர் ------- ளம்
15. வாசமுனி ------- றம்
16. கமலமுனி ------ ழம்
17. அழுகண்ணி சித்தர் ------ னம்
18. திருமூலர் ------ ஓம்
இம்மூலமந்திரங்களில் திருமூலர் சித்த தெய்வத்தின் மூலமந்திரம் ஓம் ஆகும்.
ஓம் சிவ சிவ ஓம் :-
ஓம் --- ஓரெழுத்து மந்திரம் (இரு முறை) --- இரு எழுத்துக்கள்
சிவ --- ஈரெழுத்து மந்திரம் (இரு முறை) --- நான்கு எழுத்துக்கள்
ஆக மொத்தம் ஆறு எழுத்துக்கள் (சிவம் - 5 + சக்தி - 1). சிவனும், சக்தியும் சம அளவில் கலந்த அற்புத மந்திரம் தான் ஓம் சிவ சிவ ஓம்.  சிவ சிவ - சந்நியாசிகளுக்கு மட்டுமே உரித்தானது (சிவ தத்துவம் மட்டும் தனித்திருப்பது).  ஓம் என்ற மந்திரமே அனைத்து மந்திரங்களுக்கும் சக்தி தருவது.  சக்தியின் வடிவுடையது.  ஆதிசக்தியை குறிப்பது.  ஓம் சிவ சிவ ஓம் --- இல்லற நெறியாளர்களுக்கு உகந்தது (சிவ சக்தி தத்துவமானது).  சிவசக்தி தத்துவமே குமரக்கடவுள் (ஆறுமுகம் - ஆறு எழுத்துக்கள்).  சிவசக்தி வடிவமே உலக தத்துவம்.  இதுவே லிங்க யோனி தத்துவம்.  சிவனும் சக்தியும் இணைந்தால் தான் உலக இயக்கம். 
திருமூலரின் மூலமந்திரம் - ஓம்

திருமூலர் அருளிய மந்திரம் - சிவ சிவ
இதை சம அளவில் சேர்ப்பதால் கிடைப்பதே ஓம் சிவ சிவ ஓம்.                                                               =============================================================================     மேலும் சிறு விளக்கம்:-
தமிழ் மெய்யெழுத்துக்கள் --- 18
சித்தர் ஏடுகளில் கூறப்பட்ட சித்தர்களின் மூலமந்திரங்கள் --- 18
          அவற்றுள் முதல் (சும் --- நந்தீசர்) மற்றும் கடைசி (ஓம் --- திருமூலர்) இவற்றை நீக்கி கம் மற்றும் ஙம்இவற்றை சேர்க்க கிடைப்பது உயிர்-மெய் வரிசை (கம், ஙம், சம்,.......,னம்) மொத்தம் - 18.  இவற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட மூலமந்திரம் --- கம் (கணபதியின் மூலமந்திரம்).  கணபதியும் ஒரு சித்தர் தாம்.  அவரது சமாதி இமயமலை சாரலில் உள்ளதாக படித்திருக்கிறேன். அவ்வாறெனில் ஙம் என்ற மந்திரம் ஆதி சித்தர் காகபுசுண்டர் சித்தர் பெருமானின் மூலமந்திரமாக தான் இருக்க முடியும். இது பற்றி நம் குருவிடம் விளக்கம் கேட்க வேண்டுகிறேன்.
 
ஆறு ஆதார தியான மந்திரங்கள் (சித்தர் ஏடுகளில் படித்தது):-
மூலாதாரம் --- கணபதி --- ஓம் சிவா
சுவாதிட்டானம் --- பிரம்மா --- நம் சிவ ஓம்
மணிபூரகம் --- விஷ்ணு --- மங் சிவ ஓம்
அநாகதம் --- ருத்திரன் --- சிங் சிவ ஓம்
விசுத்தி --- மகேஸ்வரன் --- வசி சிவ ஓம்
ஆக்ஞை --- சதாசிவம் --- யம் சிவ ஓம்
        என்ன வியப்பு...!  மேற்கண்ட ஆறு ஆதார தியான மந்திரங்களிலும் நம்முடைய ”ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒளிந்துள்ளது.    

பாடகச்சேரி மகான் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள்

பாடகச்சேரி மகான் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் வாழ்ந்த கிராமம். ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் குடந்தை நாகேஸ்வர சுவாமி கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்வித்து அழியா புகழ் பெற்றவர். வேறுபல கோயில்களின் திருப்பணிகளுக்கு காரணமாகயிருந்தவர். தமிழகமெங்கும் பலரையும் பல திருப்பணிகளில் ஈடுபடுத்தியவர். அவரது மகிமைகளையும் பெருமைகளையும் எல்லையற்ற தெய்வீக சக்திகளையும் இன்றும் பலர் பசுமையாக நினைவு கூர்கின்றனர். அவருக்காக ஒரு மடம் அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு அவர் சமாதியான ஆடிபூரம், மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் வெகுவிமர்சையாக கொடுக்கப்படுகிறது. சுவாமிகள் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர். அவருடைய ஜீவ சமாதி திருவற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்குப் பக்கத்தில் உள்ளது. அவர் பைரவர் உபாசகர். அவர் அன்னதானம் செய்யும் பொழுது நூற்றுக்கணக்கான நாய்கள் திடீரென்று மனிதர்கள் போல இலைகளில் உணவு அருந்தி நொடியில் எங்கோ சென்றுவிடுமாம். இன்றும் அவருடைய மடங்களில் அந்த அதிசயம் நடைபெறுகிறது. அவர் 1949 ஆம் வருடம் ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமை சமாதி கொண்டார்.

சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார்

 ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை

எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார். நாம் முன்பே கூறியதுபோல காலம், தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே கால பைரவ மூர்த்தியாவார். பூலோக ஜீவன்களைப் பொறுத்தவரை கால பைரவ வழிபாடும், பைரவ மூர்த்தியின் வழிபாடும் ஒரே விதமான பலன்களை அளிக்கக் கூடியதே. தேசம் அல்லது இடம் என்ற தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே க்ஷேத்திர பாலக மூர்த்தியாவார்.

கால பைரவ மூர்த்தியைப் போலவே க்ஷேத்திர பாலகரின் வழிபாடும் எதிர் காலத்தில் வளம் பெறும் என்பது சித்தர்களின் வாக்கு.

கால பைரவரின் வழிபாடு கால தேசங்களைக் கடந்த அனுகிரக சக்திகளை அளிக்க வல்லது என்னும் கோட்பாட்டை வலியுறுத்தவே சிவபெருமான் நான்கு நாய்களுடன் காசித்தல கங்கைக் கரையில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தார். ”பெத்த மனம் பித்து ….” என்றபடி பிள்ளைகள் பெற்றோர்களை மறந்து நன்றி இல்லாதவர்களாக எதிர்காலத்தில் மாறுவார்கள் என்பதை உரைப்பதற்காக நாய்களுடன் காட்சி தந்தார் எம்பெருமான்.

இதற்காகவே கால பைரவ மூர்த்தியும் நாயை வாகனமாகப் பெற்று நன்றி கெட்ட நிலை வராதிருக்க இறைவனை என்றும் மறக்காதிருக்க வரம் தரும் மூர்த்தியாக திருக்கோயில்களில் எழுந்தருளி உள்ளார்.

நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாமல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்லமையும் இறையருளால் படைத்துள்ளன. நமக்கு வரக் கூடிய ஆபத்துக்களையும் பிரச்னைகளையும் மூன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டுவதே கால பைரவர் வழிபாடாகும்.

சமீப காலத்தில் கால பைரவ வழிபாட்டை முறையாக நிறைவேற்றி மக்களுக்கு நல்வாழ்வு அளித்த மகானே பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆவார்கள். சித்த மரபில் வந்த இப்பெருமான் நாய்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணாதவர். நாம் மனிதர்களுக்கு உணவிடுவதைப் போலவே இவர் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், ஸ்வீட், அப்பளம், பாயசம் என அனைத்து உணவு வகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார்.

அவருடைய வழிபாட்டில் நிகழ்ந்த அதிசயம் என்னவென்றால் இவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம். இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் சுவாமிகள் அன்புடன்  உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார். அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர். அதன் பின்னர் வரும்போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ்வொரு நாயாக வெளியே சென்று விடும்.

எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம். மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், ராமலிங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்.

இவ்வாறு மகான்கள் பைரவ மூர்த்தியின் வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா? இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர்களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்.

பைரவ மூர்த்தியின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாயின் வாலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆத்ம விசாரம் செய்தாலே அதன் இரகசியத்தை உணர ரிஷிகளுக்கே எட்டு சதுர்யுக காலம் தேவைப்படும் என்றால் சாதாரண மனிதர்கள் அந்த ரகசியத்தை உணர எத்தனை யுகங்கள் ஆகும்?



பைரவ முகூர்த்தம்

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. 

இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.

அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.

சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.

இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,

பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.

இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.

பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,
  1. பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

  2. கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,

    அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.

    இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

    இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.

  3. பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.


  4. நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.

  5. பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

    எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.

    இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.


  6. வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.
காலத்தைக் கணிக்கும் வழி

ஒரு மனிதன் எப்படிக் காலத்தைக் கணிக்க வேண்டும். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இக்கேள்வியின் பின்னால் ஆழ்ந்த கருத்து உண்டு. எல்லோரும் கடிகாரத்தை வைத்துத்தானே காலத்தைக் கணக்கிட வேண்டும் என்று பதில் கூறுவர். உண்மையில் கடிகாரம், மர நிழல், சூரியனின் இயக்கம் போன்ற எந்த வெளிப்படையான உபகரணங்களை வைத்தும் காலத்தை கணக்கிடுவது உண்மையான ஆன்மீகம் அல்ல என்பதே சித்தர்களின் கூற்று. நமது முன்னோர்கள் காலத்தை எப்படிக் கணக்கிட்டனர்.

ஒரு நாளின் பகல் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் இரவு நேரத்தை எட்டு முகூர்த்தங்களாகவும் கணக்கிட்டனர். ஒரு முகூர்த்தத்திற்கு ஒன்றரை மணி நேரம் என்றால் 16 முகூர்த்த நேரத்திற்கு 24 மணி நேரமான ஒரு நாள் அமைந்தது. இந்த ஒன்றரை மணி நேர முகூர்த்தத்தை அவர்கள் அளப்பதற்கு எந்தக் கருவியை வைத்திருந்தார்கள்?

ஒவ்வொருவரும் தங்கள் மூச்சின் அளவைக் கொண்டுதான் அக்காலத்தில் கால அளவைக் கணக்கிட்டார்கள். இதுவே உண்மையான கால அளவு கோல். நாம் உறங்கினாலும் உறங்காவிட்டாலும் நின்றாலும் நடந்தாலும் சுவாசித்துக் கொண்டேதான் இருக்கிறோம், இந்த சுவாசம் காலையில் நாம் எழுந்தவுடன் பொதுவாக வலது நாசியில் ஆரம்பிக்கும். ஒரு முகூர்த்த நேரம் கழித்து அதாவது ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் இடது மூக்கிற்கு மாறும். அடுத்த முகூர்த்தத்தில் வலது நாசிக்கு மாறிவிடும்.

அக்காலத்தில் நமது முன்னோர்கள் ஒரு நாளின் நேரத்தை இவ்வாறு தங்கள் நாசியில் ஓடூம் சுவாசத்தின் போக்கை வைத்துதான் நேரத்தைக் கணக்கிட்டார்கள். மேலும் ஒவ்வொரு முகூர்த்தத்திலும் நான்கு பூதக் கலைகள் மாறி மாறி சுழன்று வரும். அதாவது பிருத்பி, அப்பு, அக்னி, வாயு என்ற வரிசையில் ஒவ்வொரு பூதக் கலையுடைய சுவாசமும் ஒரு நாழிகை நேரத்திற்கு அதாவது 24 நிமிடங்களுக்கு நிரவி நிற்கும்.

ஒவ்வொரு சுவாசக் கலையிலும் செய்ய வேண்டிய காரியங்களை நம் முன்னோர்கள் தங்கள் சற்குரு நாதர்கள் மூலம் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர். உதாரணமாக, வலது நாசி சுவாசத்தில் மலம் கழிப்பதும், இடது நாசி சுவாசத்தில் சிறுநீர் கழிப்பதும், நீர் அருந்துவதும் நலம், ஆண்கள் வலது நாசி சுவாசத்திலும், பெண்கள் இடது நாசி சுவாசத்திலும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமுள்ள சந்ததிகளைத் தோற்றுவிக்க வழி வகுக்கும்.

ராம பாணத்தைத் தடுக்க எவராலும் இயலாது என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் ராம பிரான் தன்னுடைய ஒவ்வொரு பாணத்தையும் வலது சுவாசத்தில் பிருத்வி பூதம் நிலை கொள்ளும்போது விடுத்ததே ஆகும்.  சூரிய கலையில் பிருத்வி பூதம் நிலை கொண்டால் அப்போது எழும் பாணத்தை யாராலும் தடுக்க இயலாது என்று தனுர் வேதம் உறுதி அளிக்கிறது.

இவ்வாறு நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையை நம்முடைய சுவாசத்துடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதுதான் உண்மையான கால பைரவ வழிபாடாகும். பைரவ மூர்த்தங்கள் அஷ்ட பைரவ மூர்த்திகள் என எட்டு வடிவங்களில் திகழ்கிறார்கள் அல்லவா? சீர்காழி, திருக்குற்றாலம் சித்திரசபை, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இத்தகைய அஷ்ட பைரவ மூர்த்திகளின் திருஉருவங்களைத் தரிசிக்கலாம்.

துடையூர் திருத்தல
தர்ம சக்கர பைரவ மூர்த்தி
பகலிலும் இரவிலும் நிரவி நிற்கும் எட்டு முகூர்த்தங்களுக்கும் ஒவ்வொரு முகூர்த்தத்திற்கும் ஒரு மூர்த்தியாக இந்த அஷ்ட பைரவ மூர்த்திகள் அதிபதியாகத் திகழ்கின்றனர். அந்தந்த முகூர்த்தத்திற்கு உரிய பைரவ மூர்த்தியை முறையாக வழிபட்டு வந்தால் அதுவே சிறந்த அஷ்ட பைரவ வழிபாடாக மலரும்.

மேலும் எந்த அளவிற்கு கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கணக்கிடும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய ஆயுள் குறையும் என்பது உண்மை. கேட்பதற்கு விந்தையாகத் தோன்றினாலும் இதுவே உண்மை என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளலாம். நாம் தினசரி காலை 10 மணிக்கு அலுவலகம் செல்வதாக வைத்துக் கொள்வோம். அதற்காக ஒருவர் 9 மணிக்குள் பஸ்சை பிடித்தால்தான் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியும் என்றிருந்தால் அவர் காலை எழுந்ததிலிருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு ஏற்றல் என்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே செய்யும்போது அவரையும் அறியாமல் அவருடைய மூச்சின் வேகம் அதிகரிக்கிறது.

இதனால் ஒரு நிமிடத்தில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவருடைய ஆயுள் ஓரளவு நாளடைவில் குறைந்து விடும். வருடம், மாதம் என்ற கணக்கில் நமது ஆயுள் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவருடைய ஆயுளும் இத்தனை ஆயிரம், லட்சம் சுவாசம் என்ற கணக்கில்தான் இறைவனால் நிச்சயிக்கப்படுவதால் எந்த அளவிற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் நம் சுவாசத்தின் எண்ணிக்கை குறைகிறதோ அந்த அளவிற்கு நமது ஆயுளும் வளரும் என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறது அல்லவா?

மனிதன் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முதல் 20 மூச்சுகள் விடுகிறான். ஆனால், நான்கு நிமிடத்திற்கு ஒரு முறையே சுவாசிப்பதால் அது ஆயிரம் வருடத்திற்கு அமைதியாக உயிர் வாழ்கிறது.

சில வகை ஆமைகள் பத்தாயிரம் வருடங்கள் கூட உயிர் வாழும் தன்மை உடையவை. அவை தங்கள் தலையை வெளியே இழுப்பதற்கு இரண்டு ஆண்டுகளும், தாங்கள் கால்களை வெளியே வைப்பதற்கு ஐந்து ஆண்டுகளும் எடுத்துக் கொள்ளும் என்றால் அவைகளின் சுவாசம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு நாளில் நாம் நிறைவேற்ற வேண்டிய காரியங்களை வைத்து மட்டும் நமது காலத்தை அளக்க, வாழ்வை நடத்த பழகிக் கொண்டால் சுவாசம் சீராக இயங்கும், அதனால் ஆயுள் வளரும் என்பதே சித்தர்ளின் அறிவுரை,

அதாவது, காலை ஆறு மணிக்கு எழ வேண்டும், ஏழு மணிக்கு குளிக்க வேண்டும், எட்டு மணிக்கு சாப்பிட வேண்டும், ஒன்பது மணிக்கு பஸ் பிடிக்க வேண்டும் என்ற மணிக் கணக்கு வாழ்க்கையை விடுத்து, காலையில் சூரிய உதய நேரத்தில் எழ வேண்டும், அதன் பின் குளித்து, பூஜை செய்து விட்டு, உணவருத்திய பின் பஸ் பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும் என்ற காரிய அட்டவணையை மட்டும் நாம் கருத்தில் கொண்டு செயல்பட்டால் எந்த வித ஆர்ப்பாட்டம், ஆரவாரமின்றி நமது வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடைபோல் தவழும் என்பது நமது பெரியோர்கள் கண்ட உண்மை. ஆரம்பத்தில் இது நடை முறைக்கு ஒத்து வராததுபோல் தோன்றினாலும் விடாமுயற்சியுடன் இம்முறையை மேற்கொண்டு செயல்படுத்தினால் நிச்சயம் அமைதி தவழும் உலகம் உங்களுக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த காரிய அட்டவணையை கருத்தில் கொண்டு செயல்படுத்திய பின் நமது சுவாசக் காற்றை ஆதாரமாக வைத்து நமது காரியங்களைச் செயல்படுத்தும் வித்தையை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம். இந்த முகூர்த்தத்தில் இந்த பூத தத்துவத்தில் இந்தக் காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து அக்குறிப்பிட்ட காலத்தில் அதை நிறைவேற்றி விடலாம். அவ்வாறு காரிய அட்டவணையை சுவாச சுழற்சியின் அட்டவணையின் பின்னணியில் நீங்கள் செயல்படுத்தும் முறையை அறிந்து கொண்டால் அப்போது காலம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அதாவது நீங்கள் காலத்தைக் கட்டுப்படுத்தலாம், காலம் உங்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது,

இந்த அற்புதத்தை நடைமுறையில் நடத்திக் காட்டியவர்களே நமது ரிஷிகளும் யோகிகளும். மகாபாரத யுகத்தில் திதி என்னும் காலக் கோட்பாடான அமாவாசையை ஸ்ரீகிருஷ்ண பகவான் இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் மாற்றி அமைத்தார்.

இவ்வாறு காலத்தின் கட்டுப்பாட்டைக் கடந்தவர்களே காலத்தை உருவாக்க முடியும், பகல் இரவை மாற்றி அமைக்க முடியும். இந்த வித்தையை அறிந்ததால்தான் பராசரர் பகல் நேரத்தில் இரவு காலத்தைத் தோற்றுவித்து தன்னுடைய தபோ பலனை வியாச பகவான் உருவத்தில் உலகிற்கு தாரை வார்த்துக் கொடுத்தார். 

தற்போது நம்மிடையே இமயமலைச் சாரலில் இன்றும் இளமையுடன் உலவும் அவதூது பாபாவும் காலத்தைக் கடந்த யோகியே. பகல் இரவைத் தோற்றுவிக்கக் கூடியவர், கால சுழற்சியை மாற்றும் வல்லமை படைத்தவர்.

இவ்வாறு காலத்தைக் கட்டுப்படுத்தும் வித்தை கேட்பதற்குச் சுவையாக, எளிமையாகத் தோன்றினாலும் நடைமுறையில் மிகவும் கடினம் என்று பலரும் கருதுவதால் கால பைரவ வழிபாட்டை உலகிற்கு ரிஷிகள் அளித்துள்ளனர். தர்ம தேவதையான நாயை வாகனமாகக் கொண்ட பைரவ மூர்த்தியை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் காலத்தை வெல்லும் வித்தையை நமக்கு சுவாமி அறிவுறுத்துவார்.

நமது வெங்கடராம சுவாமிகள் மட்டும் அல்லாது பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், மாயம்மா, விசிறி சுவாமிகள், கசவனம்பட்டி சித்தர், சுவாமி சிவானந்தா போன்ற பலரும் நாய்களுக்கு உணவிட்டு காலத்தை வெல்லும் வித்தையை அவ்வப்போது தமது அடியார்களுக்கு உணர்த்தி வந்தனர்.

மேலும் விரைவாக அருகி வரும் வேத சக்திகள் தழைப்பதற்கு உறுதுணை செய்வதும் பைரவ வழிபாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் வேதம் ஓதுதல் என்பது சாத்தியமானது கிடையாது. ஆனால், யாராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் பைரவ மூர்த்தியை வழிபடுவதும நாய்களுக்கு உணவிடுவதும் சாத்தியமானதே. இதனால் வேத சக்திகள் பெருகி உலகில் தர்மம் கொழிக்கும். இவ்வுண்மையை உணர்த்தவே வேதநாயகனான சிவபெருமான் நான்கு வேதங்களை நான்கு நாய்களாக்கி ஆதி சங்கரருக்கு காசியில் வேதத்தின் உண்மைப் பொருளை விளக்க வந்தார்.


குழஅழகு பைரவ பூஜை

கலியுலகில் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் கருவியே பணம் என்னும் மாயையாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த மாயையை எவராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த சித்தர்கள் பணம் என்னும் மாயையை வெல்ல முடியாவிடினும் அந்த மாயையை வைத்து நற்காரியங்களை செயலாற்றும் வித்தையை தங்களை அண்டி வரும் அடியார்களுக்கு போதித்து வருகின்றனர்.
இம்முறையில் கால பைரவ வழிபாடு பணத்தை முறையாக சம்பாதிக்கும் வழிமுறையையும் அவ்வாறு முறையாக சம்பாதித்த பணத்தை முறையான தெய்வீக காரியங்களில் செலவு செய்யும் மார்கத்தையும் புகட்டுகிறது. அந்த அற்புத மார்கத்தையே சித்தர்கள் குழஅழகு பைரவ பூஜையாக அளித்துள்ளார்கள்.

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர் பிறை அஷ்டமி திதியில் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பூஜையே குழஅழகு பைரவ பூஜையாகும். மக்கள் அனைவருக்கும் பணம் என்பது அத்தியாவசியமான ஒரு பொருளாக இருந்தாலும் வியாபாரிகளுக்கு பணம் என்பது மிகவும் அவசியமானதுதானே? அதனால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும் சில குறித்த தேவதை தெய்வங்களை உபாசித்தல் நலம்.

வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள் தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும். அதிலும் குறிப்பாக துணி வியாபாரம் செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய லட்சுமியை உபாசனை செய்வது நலம்.

துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும் பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம். பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம் பெறும்.

திருநெல்வேலியை அடுத்துள்ள இசக்கி அம்மன் என்னும் தெய்வம் புளி வியாபாரிகளுக்கு உரிய தேவதையாக போற்றப்படுகிறாள். புளி மண்டி உரிமையாளர்களும் புளி உற்பத்தி தொழிலாளர்களும் வணங்க வேண்டிய தேவதையே இசக்கி அம்மன் ஆவாள்.

பலரும் மனைவி, குழந்தைகளுக்காக அல்லும் பகலும் உழைத்து தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும் தங்கள் குடும்பத்திற்காகவே செலவிட்டு விடுவர். இத்தகையோரில் பலரும் கடைசி காலத்தில் ஆதரவற்ற நிலையில் உண்ண உணவும், இருக்க இடமும் கூட இல்லாமல் பரிதவிக்கும் நிலையில் வாட நேரிடும்போது இவர்களை அரவணைக்கும் தெய்வமே இசக்கி அம்மன் ஆவாள்.

கடைசி காலத்தில் நிராதரவான நிலையில் உள்ள முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் வாய் திறந்து இசக்கி அம்மனை நோக்கி கதறி அழுதால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் அவர்கள் குறையை உரியவர்களை அனுப்பி குறை தீர்க்கும் தெய்வமே இசக்கி அம்மன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு பத்தினி தெய்வங்களையும் பெண் தெய்வங்களையு வழிபட உகந்த திதியே வளர்பிறை சப்தமி திதியாகும். வளர்பிறை சப்தமி திதியில் சக்தி வழிபாட்டை முடித்து வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவ வழிபாட்டை நிறைவு செய்வதே குழஅழகு பைரவ வழிபாடு என்று வழங்கப்படுகிறது.

குழஅழகு பைரவ வழிபாட்டை கலியுக மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த பெருந்தகையே பகலவ முனிவர் ஆவார். இப்பெருமான்தான் இரவு ராகு கால நேரத்தையும் நம் நல்வாழ்விற்காக அறிவித்தவர். பகல் ராகு கால நேரத்தில் துர்கா தேவியின் வழிபாடும், சரபேஸ்வரரின் வழிபாடும் சிறப்புறுவதுபோல இரவு நேர ராகு காலத்தில் பேச்சியம்மன், இசக்கி அம்மன் போன்ற பத்தினி தெய்வங்களின் வழிபாடும் பைரவ வழிபாடும் சிறப்பு பெறுகிறது.

Wednesday 3 April 2013

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,

ஸ்ரீ ரெத்னவேல்முருகன் உடையார் கோவில்,
ரெத்னசாமி நகர்,
R.M.S. காலனி,
நாஞ்சிக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்-6

Sunday 31 March 2013

sri lakshmi swarnabhairavar




பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)

அம்மன்/தாயார்:-


தல விருட்சம்:-


தீர்த்தம்:-


ஆகமம்/பூஜை :சிவாகமம்


பழமை :500 வருடங்களுக்கு முன்


புராண பெயர்-


ஊர் :பரக்கலக்கோட்டை


திருவிழா:
கார்த்திகை சோமவாரம், தைப்பொங்கல்.


தல சிறப்பு :
பகலில் கோயில் திறக்காமல் திங்கட்கிழமை அன்று மட்டும் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.


திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
நிர்வாக அதிகாரி, பொதுஆவுடையார் கோவில், பரக்கலக்கோட்டை- 614 613 தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:+91- 4373 - 283 295, 248 781.














பொது தகவல்:


சுவாமிக்கென தனி விமானம் எதுவுமில்லை. மரத்தின் வடிவில் அருளும் சிவபெருமானுக்கு, மரத்தின் இலைகளும், கிளைகளுமே விமானமாக இருக்கிறது. மூலஸ்தானத்திலேயே சுவாமிக்கு முன்புறத்தில் கஜலட்சுமி காட்சி தருகிறாள். அருகிலேயே இரண்டு யானைகளும் வைக்கப்படுகிறது.
சிவனுக்கு பூஜை செய்யும்போது, இவளுக்கும் சேர்த்தே பூஜைகள் நடக்கிறது. இங்கு சிவனே பிரதான மூர்த்தியாக இருப்பதால், இங்கு அம்பிகை, சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர் என எந்த பரிவார மூர்த்திகளும் இங்கு கிடையாது. கோயிலுக்கு வெளியில் வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் (காவல் தெய்வம்) சன்னதி மட்டும் இருக்கிறது. இந்த விநாயகர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். வான் கோபர் அலங்காரத் துடனும், மகா கோபர் துறவி கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் இருக்கின்றனர்.
திங்கட்கிழமையன்று நள்ளிரவில் பூஜை முடிந்து தரிசனத்திற்காக சன்னதி நடை திறந்த பின்பு, சுவாமியை தரிசிக்க வந்த ஊர்க்காரர்களில் யார் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறாரோ அவருக்கு, சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்த பிரசாதங்கள் கொடுத்து முதல் மரியாதை செய்கின்றனர். அப்போது அவரிடம் ரூ.1 மட்டும் காணிக்கையாக வாங்குகிறார்கள். இதனை, ""காளாஞ்சி' என்கிறார்கள்.
நள்ளிரவில் சுவாமிக்கான அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த சந்தனம், மற்றும் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. கோயில் சார்பில் பணியாளர் ஒருவர் இவ்வாறு பக்தர்களுக்கு கொடுக்கிறார். அதன்பின், விடிய,விடிய அன்னதானம் நடக்கிறது.


பிரார்த்தனை


இங்கு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற வேண்டிக்கொள்ளலாம்.


நேர்த்திக்கடன்:


பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.


தலபெருமை :


ஆலமர சிவன்: ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காணமுடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்துவிடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது.
மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.
நள்ளிரவு மட்டும் தரிசனம்: இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர்.
தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.
இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.


குரு தலம்: சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் கோஷ்ட சுவரில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். இத்தலத்தில் சுவாமியே ஆலமரத்தின் வடிவில் அருளுகிறார். எனவே, இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்கு சிவனாக கருதப்படும் அரசமரத்தின் இலையே பிரதான பிரசாதமாக தரப்படுகிறது. பக்தர்கள் இந்த இலையைக் கொண்டு சென்று வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும், விவசாய நிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செயல்கிறார்கள்.
திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

விளக்குமாறு காணிக்கை: இக்கோயிலில் பெண்கள் முடி வளருவதற்காக விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை, தங்களது கையால் விளக்குமாறாக செய்து இவ்வாறு காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே முடி வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கிடைக்கும் விளக்குமாறுகளே ஆயிரக்கணக்கில் குவிந்துவிடும் என்கிறார்கள்.
இத்தலத்தில் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் இக்கோயிலுக்கு அதிகளவில் காணிக்கை செலுத்துகின்றனர்.
கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், வஸ்திரங்கள், அலங்கார பொருட்கள் என எளிய தவிட்டில் (நெல் உமி) இருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்படுகிறது.


தல வரலாறு:


வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு ""இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?'' என சந்தேகம் வந்தது. தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர்.
சுவாமி ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, ""இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு,'' என்று பொதுவாக தீர்ப்பு கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார்.
தீர்ப்பு சொல்வற்காக வந்த சிவன் என்பதால் இவர் "பொது ஆவுடையார்' என்றும், "மத்தியபுரீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.


சிறப்பம்சம்::


அதிசயத்தின் அடிப்படையில்: பகலில் கோயில் திறக்காமல் திங்கட்கிழமை அன்று மட்டும் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.

Wednesday 27 March 2013

ஸ்ரீ பஞ்சநத பாவா நிர்விகல்ப சமாதி


தஞ்சை ராஜதானி.  மராட்டியர் ஆட்சிக் காலத்தில் 215 ஆண்டுகளுக்கு முன் -

1787 க்கும் 1798 க்கும் இடைப்பட்ட  காலத்தின் ஒருநாள்.

அதுவும் ஐப்பசி மாதத்தின் அடைமழை நாள். இடைவெளியின்றி - இடி மின்னல் இன்றி - பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து நல்ல மழை!...

''...அது கெட்ட மழையாகி விடக்கூடாதே!...'' என்று பெருங்கவலையுடன் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார் மன்னர் அமர்சிங். மழைச்சாரல் மன்னரின் முகத்தில்  சில்லென - பரவிற்று. 

அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த செய்திகள் கூட - இந்த சில தினங்களில் தடைப்பட்டு விட்டது. காரணம் காவிரியின் வடக்கில் கொள்ளிடத்திலும் தெற்கில் குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாற்றிலும் கரை தழுவி ஓடும் வெள்ளம்.

கரை மீறிய வெள்ளப் பெருக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற நிலை. இதோ கண்ணுக்கு  எட்டிய வடவாற்றில் கூட மழை நீர் பொங்கிப் பிரவாகமாக ஓடுகின்றது.
மன்னரின் முகத்தில் கவலையின் ரேகைகள்.  
''... அஞ்சவேண்டாம். தஞ்சையின் கிழக்கே நாகப்பட்டினம் முதற்கொண்டு கோடியக்கரை தென்கிழக்கே சேதுபாவாசத்திரம் வரை கடல் கொந்தளிக்கவோ சூறாவளி சுழற்றியடிக்கவோ வாய்ப்புகள் ஏதுமில்லை...''
மன்னனின் மனதையும் - வானிலையையும் ஆராய்ந்த வல்லுனர்கள் சொன்னார்கள். இருப்பினும் மன்னன் அமர்சிங் அமைதி கொள்ளவில்லை. 
மன்னர் அருந்துவதற்கென்று - மழைச்சாரலின் குளுமைக்கு இதமாக, விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட வெதுவெதுப்பான மூலிகை ரசம் வந்தது. அதை நிராகரித்த மன்னர் - ''அமைச்சரை வரச்சொல்லுங்கள்'' -  என்றார்.
அடுத்த அரை விநாடியில் அரசரின் அருகில் அமைச்சர்.
'' உடனடியாக தஞ்சைக்கு வடக்கே உள்ள நிலவரம் தெரிய வேண்டும்!...'' 
'' உத்தரவு..'' - தலை வணங்கிய அமைச்சர் பலவகையிலும் திறமையான ஆட்கள் உடன் வர - தஞ்சை மாநகரின் வட எல்லையில், வடவாற்றினை நெருங்கினார்.  
மாமன்னன் ராஜராஜசோழனின் ஆன்மீக குருநாதராகிய கருவூர் சித்தரின் திருவாக்கினால் புகழப்பெற்ற ஆறல்லவா வடவாறு!... சற்று சிணுங்கலுடன் நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. மிதமாக - மழை பெய்து கொண்டு இருந்தது.
ஓடக்காரர்கள் தயாராக நின்றார்கள். வடவாற்றின் தென்கரையில் சற்று தொலைவில் - திருக்கோயில் கொண்டிருந்த அமிர்தவல்லி அம்பிகை சமேத சிதானந்தேஸ்வர ஸ்வாமியை  கைகூப்பி, கண்களை மூடித் தொழுதார். 
கண் விழித்தவருக்கு பெரும் அதிர்ச்சி. காண்பது கனவா!... இதுவரைக்கும் காணப்படாத இவர் - இப்போது எப்படித் தோன்றினார்?... எங்கிருந்து வந்தார்?...
மழை நீர் தழுவிச் செல்லும் வடவாற்றின் தென்கரைப் படித்துறையில், மழையில் நனைந்தபடி தவக்கோலத்தில் - சிவயோகத்தில் அமர்ந்திருந்த பெருந்துறவி ஒருவரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
வடவாறு வற்றினாலும் வற்றாத - கருணை வெள்ளத்தினை அவர் திருமுகத்தில் கண்டனர். அமைச்சரின் முகக்குறிப்பினை உணர்ந்த பணியாளர்கள் -  பெரிய குடை ஒன்றினை மழையில் நனையும் துறவிக்கு ஆதரவாகப் பிடித்தனர். தவநிலை தடைப்பட்டது. 
துறவியார் மெல்ல கண் விழித்தார். அமைச்சரும் மற்றவர்களும் அவருடைய பாதம் தொட்டு வணங்கினார்கள். துறவியார் திருவாய் மலர்ந்தருளினார்.
''...அஞ்ச வேண்டாம்!... எந்தத் தீங்கும் நேராது. சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.
ஓடங்கள் பயணித்தன. சில தினங்களாயின. ஆங்காங்கே ஊர் மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களைக் கொண்டே ஆற்றின் கரைகளை செம்மைப்படுத்தி -

அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு என - மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு விரைவாகத் திரும்பினார்.  இதற்குள் மழையும் ஓய்ந்து விட்டது.
அரசருக்கு செய்தி அறிவிக்கும்படி - ஓலைதாங்கிகள் அனுப்பப்பட்டனர்.
திரும்பி வரும்போது - வடவாற்றின் படித்துறையில் - சில தினங்களுக்கு முன் கண்ட கோலத்திலேயே - அந்தத் துறவி அமர்ந்திருக்கக் கண்டனர். அச்சமும் வியப்பும் மேலிட்டது. ஆரவாரங்களினால் கண் விழித்த துறவியார் மீண்டும் கூறினார்.
''சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.
அமைச்சர் விரைந்து அரண்மனைக்குச் சென்றார். தஞ்சை வடக்கு வாசலில் பெருந்தோரணங்கள். எங்கும் ஆரவார - ஜயகோஷங்கள். என்ன விசேஷம்!... வியப்படைந்த  அமைச்சரை பட்டத்து யானை மாலையிட்டு வரவேற்றது.
மங்கல வாத்தியங்கள் முழங்கின.  அரசர் எதிர்கொண்டு நின்றார். அறிவிற் சிறந்த அமைச்சர் அல்லவா!.. விஷயம் விளங்கிற்று.  நாணம் கொண்டார்.

அரசரை வணங்கியபடி சொன்னார் - '' நான் என் கடமையைத்தான் செய்தேன்!'' 
அரசர் சொன்னார் - '' அதையும் செம்மையாய் செய்தீர்கள் அல்லவா!...''

பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
''செய்ததெல்லாம் குருநாதர்..'' - அன்று நடந்ததை அமைச்சர் விவரித்தார்.
அரசரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். வடவாற்றின் படித்துறையில் அதே நிலையில் குருநாதரைக் கண்டு தொழுது வணங்கினர். அனைவரையும் வாழ்த்தியருளினார் குருநாதர். மக்கள் வெள்ளமென வந்து அடி பணிந்தனர். அந்த மகானின் பார்வையினால் அனைவருக்கும் நலம் விளைந்தது.
மக்கள் அந்த மகானை '' பாவா '' என்று அன்புடன் அழைத்து அகமகிழ்ந்தனர். பின்னர் '' பஞ்சநத பாவா '' என்று அறியப்பட்டு,   பலகாலம் வீற்றிருந்தார்.
கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும்  கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்ந்தார் மகான் பஞ்சநத பாவா. அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்பட்டனர்.
எல்லோருக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்த - அந்த ஞானஒளியும் தன்னை ஒளித்துக் கொள்ளும் நாள் வந்தது. கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் வெள்ளம்.

அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது. அப்படி ஆழ்ந்த நாள் மாசி மாதத்தின் அமாவாசை தினம். 
மகாசிவராத்திரியன்று தவநிலையில் -  சிவமாகப் பொலிந்த தவம், பொழுது விடிந்த வேளையில்,  விடிந்தது பொழுது என்று சிவநிலையினை எய்தியது.
நிர்விகல்ப சமாதியை நிலைப்படுத்தி சிவலிங்கம்  நிறுவினர்.

பாவா சிவயோகத்தில் அமர்ந்திருந்த படித்துறை
இன்றும்,  குருநாதர் பஞ்சநத பாவா ஸ்வாமிகள் -
கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும் கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்கின்றார். அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்படுகின்றனர்.

பூமிக்குக் கீழ் 15 அடி ஆழத்தில் உள்ள நிர்விகல்ப நிலை
இன்று (11.3.2013) மாசி அமாவாசை தினம். நம் குருநாதருக்கு ஆராதனை நாள்.

தஞ்சை மாநகரின்  ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய பெருமையுடைய கரந்தை எனும் கரந்தட்டாங்குடி. கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது குருநாதர் பஞ்சநதபாவா ஸ்வாமிகள் அருளும் நிர்விகல்ப சமாதி அதிஷ்டானம்.

குருநாதரின் கருணை விளக்கு கவலைகளை ஓட்டும். கலங்கரை விளக்காகக் கரை காட்டும்.  
'' பஞ்சநத பாவா திருவடிகள் சரணம்!...''

கொங்கணவர் பிரதிஷ்டை செய்த கொங்கணேசுவரர் ஆலயம்

 

கொங்கணவர் பிரதிஷ்டை செய்த கொங்கணேசுவரர் ஆலயம், தஞ்சாவூர் மேலவீதியில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. திருமணப் பேறு, மகப்பேறு வாய்க்காதவர்கள் மற்றும் செல்வம் வேண்டுவோர் கொங்கணவச் சித்தரிடம் கீழ்க்கண்டுள்ள பிரார்த்தனையை மேற்கொண்டால் அவை சித்திக்கும் என்பது, வழிபாடு செய்த பலன் கண்டவர்களின் நம்பிக்கை
ஆலய தரிசனத்தை ஒரு சுற்று முடித்துவிட்டு, கொங்கணவச் சித்தர் சந்நிதிக்கு வந்து அவர் சந்நிதியில் இடம் பெற்றுள்ள சுமார் 4 அடி உயரம் கொண்ட  365 தீப அலங்கார அடுக்கிலும் எண்ணெயிட்டு நிரப்பி, அதில் திரிகள் இட்டு  தீபம் ஏற்ற வேண்டும்.
அனைத்து தீபங்களும் ஒரே சமயத்தில் ஒளிர்விடும் நேரத்தில், ஆலய  அர்ச்சகர் கொங்கணவச் சித்தருக்கான அபிஷேகங்களைச் செய்வித்து, புத்தாடை அணிவித்து, அர்ச்சனையும் முடித்து முடிவில் தீபாராதனை  செய்வார். இத்தனையும்  365 தீபங்களும் எரியும் போதே செய்ய வேண்டும் என்பது ஐதீகம். விளக்கேற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கப் பெறுகிறார்கள்.
.
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.

கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர். அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள். இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும். கொங்கணர் குடும்பத்தில், சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது. கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது... திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க... சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது. கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது. இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது. போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார். ‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர். ‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’ ‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’ ‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது..... ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது....’’ ‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’ ‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்...’’ ‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா...? வேறு வழிகள் இல்லையா?’’ ‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி... தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்... தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...!’’ _ என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது. போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது. ‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்...’’ _ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது. எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன. அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...! ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம். உதாரணத்திற்கு, விசுவாமித்திரர் ஒருவர் போதுமே...! இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர், தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது... யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார். இப்படி கொங்கணர் அப்படியும் இப்படியுமாக தடுமாறினாலும், இறுதியில் தவத்தின் பெருமையை உணர்ந்து, பெரும் தவசியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். ‘நான் ஒரு தவசியே இல்லை.... நான் தவசியாக வேண்டுமானால் என்னையே மறக்க வேண்டும். எனக்கு என்னை நன்றாகத் தெரிகிறது எனும்போது, நான் எப்படி தவசியாவது...? ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும்!’ என்று அவர் தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது. மொத்தத்தில், கொங்கணர் வாழ்க்கை என்பது, மானுடர்களுக்கு தவத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு வாழ்க்கையாக ஆகிவிட்டது. இவர் வாழ்வில், பல ரசமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது. அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்... அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு.... ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம், கோபமும் கர்வமும்... மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும். துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே, தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். ‘படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோ’ என்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்... அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்றார். ‘நான்’ என்பது நீங்கி மமதை விலகிடும்போது, எல்லாமே வசப்படுகிறது. அல்லாதவரையில், எத்தனை பெரிய தவசியாக இருந்தாலும், மாயை அவர்களை விடுவதில்லை. கொங்கணரையும் அது அவ்வப்போது ஆட்டிவைத்து தலையில் குட்டியது. கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. அப்போது வள்ளுவருக்கு வாசுகி பணிவிடை செய்தபடி இருந்தாள். கற்புக்கரசிகளான நளாயினி, கண்ணகி, சீதை போன்றவர்களுக்கு ஒரு மாற்றுக் கூட குறையாதவள், வாசுகி. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது. காரணம், அவளது பணிவிடை. இது புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்...’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்க, ஆடிப்போய் விட்டது கொங்கணனின் தேகம். வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது! அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது... ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா... மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா?’’ என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள். காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார். ஒருமுறை, சிவலிங்கம் ஒன்றின்மேல் பூப்போட்டு வணங்குவது போல குளிகையைப் போட்டு வணங்கினார். அந்தக் குளிகை பொடிந்து பூசிக் கொள்ளும் நீறாகாமல் அப்படியே ஆவியாகி விட்டது. அது, குளிகைக்கு நேர்மாறான செயல்! அங்கே அவ்வாறு ஆகவும், இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புவதைப் புரிந்து கொண்டு, அங்கேயே தவம் செய்து, ‘குளிகையை மலரினும் மேலாகக் கருதி அதை லிங்கத்தின் மேல் வைத்தது தவறு’ என்பதை உணர்ந்தார். அப்படி உணர்ந்த நொடியில் அக்குளிகை திரும்ப அவருக்குக் கிட்டியது. சில குளிகைகள், வைக்கப்படும் இடத்தில் கல்லோ மண்ணோ இருந்தால், அதை சாம்பலாக்கி விடும். அவ்வளவு உஷ்ணமானவை. லிங்கத்தையே கூட தன் குளிகை சாம்பலாக்கும் என்று காட்ட கொங்கணர் முயன்றார். ஆனால், தோற்றார் என்றும் கூறுவர். கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது. அபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும்.

கொங்கணர் நூல்கள்

கொங்கணர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

நூல்கள்

  • தனிக்குணம் 200
  • வாத சூத்திரம் 200
  • வாத காவியம் 3000
  • வைத்தியம் 200
  • சரக்கு வைப்பு 200
  • முக்காண்டங்கள் 1500
  • தண்டகம் 120
  • ஞான வெண்பா 49
  • ஞான முக்காண்ட சூத்திரம் 80
  • கற்ப சூத்திரம் 100
  • உற்பக்தி ஞானம் 21
  • முதற்காண்ட சூத்திரம் 50
  • வாலைக்கும்மி 100
  • ஆதியந்த சூத்திரம் 45
  • நடுக்காண்ட சூத்திரம் 50
  • முப்பு சூத்திரம் 40
  • ஞான சைதண்யம்109
  • கடைக்காண்ட சூத்திரம் 50