Monday 13 February 2012

சொர்ண ஆகர்ஷண பைரவர்

சொர்ண ஆகர்ஷண பைரவர்

சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரமும்,அஷ்டமிதிதியும் சேர்ந்துவரும் நாளில் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்தால்,நமது நீண்ட காலக் கடன்கள் தீரத்துவங்கும்;வராத கடன் முழுமையாக நம்மை வந்துசேரும்;தொழிலில் நொடித்துப்போனவர்கள் மற்றும் வீழ்ச்சி நிலையில் இருக்கும் தொழிலதிபர்கள் வீழ்ச்சி நிலையிலிருந்து வளர்ச்சி நிலையை எட்டத் துவங்குவர்;
ஏனெனில்,சிவபெருமானின் முதல் அவதாரமே பைரவர்தான்;வீட்டில் வைத்து வழிபட ஏற்றவர் சொர்ண ஆகர்ஷண பைரவரே!!இவரது படத்தை நமது வீட்டில் வைத்து,சொர்ண பைரவரின் மூல மந்திரத்தை 330 முறை தினமும் வரும் இராகு காலத்தில் ஜபித்துவந்தால்,சில மாதங்களில் மேற்கூறிய முன்னேற்றங்களை அடைய முடியும்.
--------------------------
சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதி
ரத்தினவேல்முருகன் உடையார் கோவில்
R.M.S., COLONY
நாஞ்சி கோட்டை சாலை,
தஞ்சாவூர்-6