Monday 23 May 2011

திருப்புறம்பயம்

இறைவர் திருப்பெயர் : சாட்சி நாதேஸ்வரர், புன்னைவன நாதர்
இறைவியார் திருப்பெயர் : கரும்படுசொல்லம்மை, இட்சுவாணி
தல மரம்  : புன்னை
தீர்த்தம்                  : பிரம தீர்த்தம், சப்த சாகர தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்
வழிபட்டோர்  : அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்ரர்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - மறம்பய மலைந்தவர். 
     2. அப்பர் - கொடிமாட நீடெருவு. 
     3. சுந்தரர் - அங்கம் ஓதியோர்
gOpuram


தல வரலாறு

  • பிரளய காலத்தில், வெள்ளம் ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு, புறத்தே நின்றமையால், இப்பெயர் பெற்றது. இத்தல விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் எனப்படுகிறார்.
  • ஒரு வணிகப் பெண்ணிற்காக, இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், சாட்சி நாதர் எனப் பெற்றார். வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி (மதுரையிலுள்ளது.)
  • சனகர் முதலிய நால்வருக்கு இறைவன், இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார்.
thirupurambayam temple

சிறப்புக்கள்

  • இத்தல விநாயகர் (பிரளயங்காத்த விநாயகர்) சிப்பி, சங்குகளால் ஆக்கப்பெற்றவர். ஆண்டுதோறும், ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகிறது.
  • இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஒடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
  • இக்கோவில் மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.
  • சோழர் கால கல்வெட்டுகள் 11 படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்


மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திற்கு வடமேற்கே 9கீ.மீ.தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

No comments:

Post a Comment